அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு -24க்கு முன்னர் விண்ணப்பிக்கவும்

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை, 2019/20 கல்வியாண்டு இருவருட ஆசிரியர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பிப்பவர்கள் -24ம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பத்தினை கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. 

இது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. 

ஆரம்பக்கல்வி, கணிதம், விஞ்ஞானம், இஸ்லாம், உடற்கல்வி, ஆங்கிலம், சித்திரம் ஆகிய பிரிவுகளில் கற்கையை மேற்கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர் உதவியாளர்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும் என  கலாசாலை அதிபர் ஏ.எம்.பைஸால் தெரிவித்தார்.   ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பப்படிவங்களை அரசினர் ஆசிரியர்   கலாசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும். 

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்) 

Tue, 04/23/2019 - 08:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை