வெடிபொருள் நிரப்பிய லொறி, வான் கொழும்புக்குள் ஊடுருவல்

வெடிப்பொருட்கள் நிறப்பப்பட்ட லொறி மற்றும் சிறிய வேன் ஒன்று கொழும்புக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளமையையடுத்து கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் இருப்பின் பொறுப்புடன் அவை தொடர்பில் பொலிஸாருக்கு அறியத்தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெடிப்பொருட்கள் அடங்கிய லொறி மற்றும் வேன் என்பன கொழும்புக்குள் ஊடுருவியிருப்பது ஊர்ஜிதமானதையடுத்து கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மாவட்டத்தின் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டதுடன் வீதியில் சென்ற மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

லக்ஷ்மி பரசுராமன்

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை