ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

SUG

எதிர்வரும் 9ஆம் திகதி நள்ளிரவு முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.

ரயில்வே சாரதிகள், ரயில்வே காவலர்கள், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ரயில்வே மேற்பார்வையாளர்கள் ஆகியோரே பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் லால் ஆரியரத்ன தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட தரங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட எம்.பீ -1 மற்றும் எம்.பீ -2 சம்பள அளவுத்திட்டக்  கொடுப்பனவை வழங்குவதில் தொடர்ந்து காணப்படும் தாமதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். 

Thu, 04/04/2019 - 10:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை