ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின்; சில இடங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களிடம், வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
from tkn