கொழும்பின் பிரபல தனியார் வைத்தியசாலையின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட யுவதியின் பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பின் பிரபல தனியார் வைத்தியசாலையில் உதவி மனிதவள முகாமையாளராக பணிபுரிந்த கருண்யா சிங்காரவேல்( 30) என்கின்ற இந்த யுவதி, கடந்த ஏப்ரல் 11, குறித்த தனியார் வைத்தியசாலைக்கு வந்த அவர், 10ஆம் மாடி வரை சென்று பின்னர் 9ஆவது மாடிக்கு வந்து அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலாங்கொடை பகுதியை சேர்ந்த கருண்யா பேராதெனிய பல்கலைக்கழக பட்டதாரி என்பதும் நவலோக்க வைத்தியசாலையில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
from tkn