அம்பாறையில் மேலதிக அரசாங்க அதிபர்களாக இருவர் கடமையேற்பு

அம்பாறை மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர்களாக வி.ஜெகதீஷன், ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் நேற்று (10) தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஏற்கனவே மேலதிக அரசாங்க அதிபர்களாக கடமையாற்றிய கே.விமலநாதன், எம்.எஸ்.அமீர் ஆகியோர் அமைச்சின் செயலாளர்களாக இடமாற்றம் பெற்றுச் சென்றதை அடுத்து இந்தப் பதவி நிலைக்கான வெற்றிடங்கள் மிக நீண்டகாலமாக நிரப்பப்படாமல் காணப்பட்டது. இன்னிலையிலேயே இந்த வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்பட்டுள்ளன. ஏ.எம்.அப்துல் லத்தீப், நிந்தவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய நிலையிலேயே மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வி.ஜெகதீஷன், காரைதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றிய நிலையிலேயே மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாண்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவராவார். இவர்கள் இருவரும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(பெரியநீலாவணை விசேட, மருதமுனை தினகரன், அம்பாறை மாவட்ட குறூப், வாச்சிக்குடா விசேட, நிந்தவூர் குறூப் நிருபர்கள்) 

Thu, 04/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை