பாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் உட்பட ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கல்வி அமைச்சின் பொறுப்பாகும். இதன் பிரகாரம் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதுடன் பாடசாலைகளின் பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் அதற்கு முன்னர் பாடசாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவாதற்காக குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சரும் கல்வி அமைச்சின் செயலாளரும் பாதுகாப்பு பிரதானிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
from tkn