நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் "நாட்டிற்காக ஒன்றிணைவோம்" தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைவாக மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (10) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி ஊடகவியலாளர்களுக்குத் தெளிவூட்டுவதற்கே இச்செயலமர்வு நடத்தப்பட்டது. அத்துடன் ஊடகவியலாளர்களின் ஆற்றல் மற்றும் அறிவை மேம்படுத்தும் விரிவுரைகளும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை அரசாங்க தகவல் திணைக்களமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து நடத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் அதிதிகளாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எல்.பி திலகரத்ன, தகவல் திணைக்கள பணிப்பாளர் ஹர்ஷ ஜெயதிஸ்ஸ, பத்திரிகை பேரவையின் உதவி ஆணையாளர் விஜயரத்ன, வண்ண வானவில் ஆசிரியர் தே. செந்தில் வேலவர் முதலானோர் கலந்துகொண்டனர்.

ஆரையம்பதி, நாவற்குடா தினகரன் நிருபர்கள்

Thu, 04/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை