சித்திரைப் புத்தாண்டையிட்டு விசேட பஸ் சேவை

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் நன்மை கருதி விசேட பஸ் சேவைகளை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, இ.போ.சபையின் விசேட பஸ் சேவைகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை இடம்பெறும் என, இ.போ.சபையின் நேர அட்டவணை முகாமையாளர் சஜீவ திலுக்ஷ தெரிவித்தார்.

பயணிகளின் நன்மை கருதி கொழும்பு, ஹட்டன், கண்டி, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு முன்னுரிமை வழங்கி மேலதிகமாக 1,487பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. 

அத்தோடு, இக்காலப்பகுதியில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலும் விசேட பஸ் சேவைகளை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

Wed, 04/03/2019 - 13:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை