படையில் மீண்டும் சேர பொது மன்னிப்புக் காலம்

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள படையினரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள பொது மன்னிப்புக் காலம் வழங்கப் பட்டுள்ளது.இம்மாதம் 22முதல் மே மாதம் 10ஆம் திகதி வரை இவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். 

இதுவரை 15,000 லிருந்து 20,000பேர் வரையிலானோர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்காகவே பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ) 

Mon, 04/08/2019 - 11:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை