மதூக்ஷுடன் கைதான மேலும் 6 பேர் நாடு கடத்தல்

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்ட மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட 6 பேரில் மாகந்துரே மதூஷின் உறவினர் ஒருவரும் அடங்குகின்றார்.

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட இவர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (17) அதிகாலை 4.45மணியளவில்  வந்தடைந்தபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்று விசாரணை செய்து வருகின்றனர்.

முஹம்மட் ரிஸான் முஹம்மட் பதூர்தீன், கயான் புத்ஹீமா, முஹமட் ஜாபீர், ஆர்.சுரேஷ் வசந்த, எச்.ரூபதாஸ சைமன், எஸ்.நிலான் றோமேஷ் ஆகியோரே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  

கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி, தூபாயில் ஆடம்பரக் ஹோட்டலொன்றில் மாகந்துரே மதூஷ் உட்பட 31 பேர் துபாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Wed, 04/17/2019 - 08:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை