மஹியங்கனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில், மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இன்று (17) அதிகாலை 1.30மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து தியத்தலாவை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் வண்டியொன்றும் வானொன்றும் மோதி விபத்திற்குள்ளானது.
உயிரிழந்தவர்களில் 3 சிறுவர்கள் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Wed, 04/17/2019 - 07:56
from tkn