46 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் விர்ஜினியா கடற்கரை கூடாரம் ஒன்றில் இரு பதின்ம வயது யுவதிகளை கொடூரமாக கொலை செய்த 80 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1973ஆம் ஆண்டு விர்ஜினிய கடற்கரையில் 19 வயது கொண்ட இரு யுவதிகள் கொல்லப்பட்டது தொடர்பிலேயே கடந்த திங்கட்கிழமை நியூயோர்க் நகரில் ஏர்னஸ்ட் போட்னக்ஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தீர்க்கப்படாமல் இருந்த இந்த விசாரணையில் முக்கியமான துப்பு கிடைத்ததை அடுத்தே விர்ஜினிய கடற்கரை பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னர் இருக்காத நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு ஆதாரம் சேர்க்கப்பட்டதாக பொலிஸார் கூறிய போதும் அதுபற்றி மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
கைது செய்யப்பட்ட போட்னக்ஸ் குற்றப் பின்னணி கொண்டவராக இருந்திருப்பதோடு குறைந்தது 14 தடவைகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
from tkn