39 வயதில் 44 குழந்தைகளுக்கு தாயான உகண்டா நாட்டு பெண்

உகண்டாவில் 12 வயதில் திருமணம் செய்துகொண்ட 39 வயது மரியம் நபடன்ஸிக்கு என்ற பெண் மொத்தம் 44 குழந்தைகளை பெற்றுள்ளார்.

இதில் 6 பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள், 4 முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள், 5 முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் அடங்கும். அதில் 6 குழந்தைகள் இறந்துவிட்டன. தற்போது மரியம் 38 பிள்ளைகளை சிரமப்பட்டு வளர்த்துவருகிறார்.

முதல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தவுடன் மரியம் மருத்துவரைப் பார்க்கச் சென்றுள்ளார். மரியமின் கருப்பைகள் பெரிதாக இருந்ததால், கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டால் உடல்நலப் பிரச்சினைகள் வரலாம் என்று மருத்துவர் கூறினார்.

3 வருடங்களுக்கு முன், மரியமை அவரின் கணவர் கைவிட்டுவிட்டார். மரியம் தனது 38 குழந்தைகளை தனி ஆளாக வளர்க்க பல வேலைகளைச் செய்யத் ஆரம்பித்தார். அதிலிருந்து வரும் சிறிதளவு பணம் பிள்ளைகளின் அடிப்படை தேவைகளுக்கே சரியாகப் போய்விடுகிறது என்று புலம்புகிறார் மரியம்.

Sat, 04/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை