கடும் காற்று, மழையால் வெஞ்சர் தோட்டத்தில் 10 வீடுகள் சேதம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிலுள்ள வெஞ்சர் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழையால் 10ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

வெஞ்சர் தோட்டத்தில் சில இடங்களில் வீசிய கடும் காற்றுக் காரணமாக வீடுகளின் கூரைகள் மழையுடன் கூடிய காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும், தொடர்ந்து பெய்த மழையால் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள், பாடசாலை புத்தகங்கள் என அனைத்தும் நீரில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் கடும் காற்றினால் மரங்களின் கிளைகள் வீட்டின் கூரைகள் மீது முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் கூரைகளை சீர்செய்து வருகின்றனர்.

மேலும் மாலை வேளைகளில் இடி, காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அவதானமாக செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்தோடு அனர்த்தங்களின் போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Sat, 04/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை