ஐ.தே.க. மேதினம் கொழும்பு மாநகர மைதானத்தில்

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின கூட்டம் அடுத்து நடைபெறவுள்ள தேசிய தேர்தலை வெற்றிக்கொள்ளும் வகையில் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்திற்கு இலட்சக்கணக்கான மக்களை கொழும்பு அழைத்து வந்து வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறிகொத்தவை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் களுத்துறை மாவட்டத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது. மே தினத்திற்கு பின்னர் அநுராதபுரம் மாவட்டத்தில் சிறிகொத்த கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம்.அத்துடன் மே தினத்திற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஆரம்பிக்கவுள்ள மெகா கூட்டணியை பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Tue, 03/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை