பதுளை மாவட்டத்தின் சில இடங்களில் நில அதிர்வு

பதுளை, ஹாலி எல, வெலிமடை, பசறை ஆகிய பிரதேசங்களில் இன்று (16) காலை சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று காலை 8.15 - 8.20 இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.

பாரிய சத்தத்துடன் 3 - 5 செக்கன்களுக்கு குறித்த நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Sat, 03/16/2019 - 10:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை