பெலியத்த பிரதேச சபை உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு

ஐக்கிய தேசிய கட்சியின் பெலியத்த பிரதேச சபை உறுப்பினர் கபில அமரகோன் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதைத் தொடர்ந்து, தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

மோதரவல, பல்லத்தர பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (20) காலை 7மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Wed, 03/20/2019 - 11:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை