தென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார இராஜினாமா

தென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார, ஆளுநர் கீர்த்தி தென்னகோனிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

நேற்று (18) கிரிஷாந்த புஷ்பகுமார தனது இராஜினாமா கடிதத்தை தன்னிடம் கையளித்ததாக, தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

16வயது பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனை அடுத்து பெப்ரவரி 28ஆம் திகதி அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதை அடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தன்மீது தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பில் சுயாதீனமாக முகம் கொடுப்பதற்கும் இவ் வழக்கு விசாரணையை சுதந்திரமாக முன்னெடுக்க வசதியாகவும் மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜனாமா செய்ததாக கிரிஷாந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

Tue, 03/19/2019 - 12:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை