கல்விச் சுற்றுலா சென்ற பஸ் விபத்து; 13 மாணவர்கள் காயம்

கல்விச் சுற்றுலாவுக்காக பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஒன்று விபத்திற்குள்ளானதில், மாணவர்கள் 13 பேர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பலாந்தோட்டை, தெஹிகஹலந்த பகுதியில் இன்று (19) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலை மாணவர்களின் தனியார் பஸ் வண்டியும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியும்  தங்காலையிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி ஒரே திசையில் பயணித்துள்ளன.

அவ்வேளையில், பயணி ஒருவரை ஏற்றுவதற்காக குறித்த இ.போ.ச. பஸ் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், அதன் பின்புறமாக பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த தனியார் பஸ் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காலி மஹிந்த வித்தியாலய மாணவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

இவ்விபத்தில், பாடசாலை ஆசிரியர்கள் இருவர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Wed, 03/20/2019 - 12:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை