இரட்டைக்கொலை: உதவிய பெண் கைது

பிலியந்தலை, மொரட்டுமுல்ல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுமுல்ல பகுதியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 55 வயதான பஸ் சாரதியும் அவரது மகனின் நண்பரும் உயிரிழந்தனர். இதேவேளை, இந்தச் சம்பவத்தில் பஸ் சாரதியின் மகன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த மீரிஹான பொலிஸ் பிரிவினர் குறித்த பெண்ணைக் கைதுசெய்துள்ளனர்.

Thu, 03/21/2019 - 14:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை