ஹெரோயினுடன் 2 பெண்கள் உட்பட நால்வர் கைது

​நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது 635கிராம் மற்றும் 410மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கிராண்ட்பாஸ், மாத்தறை மற்றும் பேலியாகொடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர்  கூறினார். 

கிராண்ட்பாஸ் மாதம்பிட்டி சந்தியருகில் பெண்ணொருவர் 504கிராம் மற்றும் 540மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு-13ஐச் சேர்ந்த திலுக்‌ஷி நிசன்சலா (27) ஹெரோயினுடன்... (03ஆம் பக்கத் தொடர்)

என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை மாத்தறை வல்கம சந்தியருகில் 120கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேனி என அழைக்கப்படும் நதீஷா என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பேலியாகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துட்டுகைமுனு மாவத்தையில் 515கிராம் ஹெரோயினுடனும் கிரேண்ட்பாஸில் ரமேஷ் சில்வா(25) என்பவர் 10கிராம் 295மில்லிகிராமுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Sat, 03/30/2019 - 08:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை