பட்டுப்புடைவைகளுடன் மறைத்து வைக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்பு

இருபது இலட்சம் ரூபா பெறுமதியான 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தமிழ்நாடு, நாமக்கல்லிலிருந்து வந்த இந்திய பிரஜை (45) ஒருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து இல. எஸ்.ஜி. 001 எனும் விமானத்தில் இன்று (30) அதிகாலை 1.40 மணியவில் போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது கைதுசெய்யப்பட்டதாக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமண பட்டுப்புடைவைகளுடன் குறித்த போதைப்பொருளை சந்தேக நபர் மறைத்து வைத்துக் கொண்டு வந்ததாகவும், சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரிடம் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Sat, 03/30/2019 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை