சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டு இலட்சத்து 40ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதுடன் இவ்வருடம் ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 44ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த வருடம் ஜனவரியுடன் ஒப்பிடுகையில். இது இரண்டு சதவீதத்திற்கு மேலான வளர்ச்சியாகும் என்றும் இம்முறை இந்தியாவிலிருந்து கூடுதலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.​(ஸ)

Thu, 02/21/2019 - 13:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை