இலங்கையின் 71 வது தேசிய தினத்தின் கிழக்கு மாகாண பிரதான தேசியதின வைபவம் இன்று (04) காலை திருகோணமலையில் உள்ள பெற்றிக் கோட்டை முன்றலில் திருகோணமலையில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண செயலகமும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையும் கலை நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான நஜீப் அப்துல் மஜீத், ஜயந்த விஜேசேகர உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள்,உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண தேசிய தின நிகழ்வின் போது கனத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இம் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையிலும் படையினரினதும், மாணவர்களினதும் அணிவகுப்புக்கள் இடம்பெற்றன. இதேவேளை கொட்டும் மழையிலும் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எவ்வித மழைத்தடுப்புகளையும் பயன்படுத்தாது செயற்பட்டமை பலரையும் வியப்பூட்டியது.
from tkn