தாய்ப்பால் புரையேறி குழந்தை பலி

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் தாய்பால் புரையேறியதில் ஒரு மாத குழந்தை உயிரிழந்துள்ளது.  

நேற்று பிற்பகல் (10) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பம் ஒன்றின் ஒரு மாதக் குழந்தை பாலுக்கு அழுத நிலையில் தாய் அதற்கு பாலூட்டியுள்ளார். இதன்போது தாய்பால் புரையேறியுள்ளது. உடனடியாக குழந்தையை வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் குழந்தை மரணமடைந்துள்ளது.  

ரங்கநாதன் ரவீன் என்கின்ற ஒரு மாத வயதுள்ள ஆண் குழந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளது.

(வவுனியா விசேட நிருபர்)  

Mon, 02/11/2019 - 08:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை