சுங்கத்துறை ஊழல் மோசடிகள்; எவரையும் பாதுகாக்கும் அவசியம் கிடையாது

சுங்கத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் எவரையும் பாதுகாக்கவேண்டிய அவசியம் தமக்கு கிடையாதென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  

இதற்கிணங்க சுங்கத்துறையில் இடம்பெறும் சகலவிதமான ஊழல் மோசடிகள் தொடர்பில் முழு நாட்டுக்கும் தகவல்களை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை அங்குள்ள பிரதானிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். 

கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள பி.எம்.டபிள்யூ சொகுசு வாகனம் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமை, கொட்டைப் பாக்கு மற்றும் மிளகு ஏற்றுமதியின் போது இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்குள் அது தொடர்பான அறிக்கையை அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கும் பொறுப்பை சுங்கப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம். சார்ள்ஸுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (ஸ)   

Mon, 02/11/2019 - 08:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை