ஒலுவிலில் கோரவிபத்து ஆட்டோ சாரதி பலி

கொழும்பு – அக்கரைப்பற்று அதி சொகுசு பஸ்ஸும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டிச் சாரதி, ஸ்தலத்தில் உயிரிழந்தார்.பஸ்வண்டியின்

சில்லுக்குள் சிக்கி முச்சக்கர வண்டி சுக்கு நூறாகிக் கிடந்தது.ஒலுவில் - பாலமுனை எல்லைப் பிரதேசத்தில் நேற்று (07) அதிகாலை 5.00 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த அதி சொகுசு தனியார் பஸ் வண்டியும் தம்பிலுவிலிருந்து மாளிகைக்காடு வந்த முச்சக்கர வண்டியுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ் விபத்துச் சம்பவத்தில் தம்பிலுவில் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த இராஜலிங்கம் கவீந்திரன் என்ற 37 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்தார்.

அட்டாளைச்சேனை தினகரன், ஒலுவில் தினகரன் நிருபர்கள்

Fri, 02/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை