கனடாவில் வீடொன்றில் தீ: ஏழு சிரிய சிறுவர்கள் பலி

கனடாவின் கிழக்கு துறைமுக நகரான ஹல்பெக்சில் வீடோன்று தீப்பற்றி எரிந்ததில் அதில் தங்கி இருந்த சிரிய அகதி குடும்பம் ஒன்றின் ஏழு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் ஐந்து மாதம் தொடக்கம் 15 வயது கொண்ட சிறுவர்களே உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

சிரியாவின் ரக்கா நகரில் இருந்து இந்தக் குடும்பம் 2017 ஆம் ஆண்டு கனடாவுக்கு இடம்பெயர்ந்து. இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கடந்த செவ்வாய்கிழமை நல்லிரவில் திடீரென தீ பரவியுள்ளது.

இந்த தீக்கான காரணம் பற்றி விசாரணைகள் நடத்தப்படுவதோடு அது முடிவதற்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.

இந்த குழந்தைகளின் 39 வயது தந்தை இப்ராஹிம் பர்ஹோ மற்றும் 40 வயது தாய் இருவரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை