ஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்

ஈராக் பெண் ஒருவருக்கு சுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது.

ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தைச் சேர்ந்த யுசுப் பத்லே என்பவருக்கு திருமணமாகி ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் ஆறு பெண், ஒரு ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.

பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் பிரபலமடைந்துள்ளது.

உலகிலேயே, ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறப்பது இது முதன்முறையல்ல.

இதற்கு முன்னர் கடந்த 1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் அயோவா மாநிலத்தைச் சேர்ந்த கென்னி மற்றும் பாப்பி மெக்கே என்ற தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் பிறந்தன.

இதேபோன்று, கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தது. அவற்றில் 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை