அவசர திருத்தவேலை; கடுவலை பாலம் தற்காலிக மூடல்

Rizwan Segu Mohideen
அவசர திருத்தவேலை; கடுவலை பாலம் தற்காலிக மூடல்-Kaduwela Bridge Closed from Today

அவசர திருத்த வேலை காரணமாக கடுவலை பாலம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இன்று (26) முதல் எதிர்வரும் மார்ச் 02 ஆம் திகதி வரை, இரவு 10.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை, கடுவலை - பியகம வீதியிலுள்ள பாலம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சாரதிகள் மாற்று வழியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tue, 02/26/2019 - 10:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை