அவசர திருத்த வேலை காரணமாக கடுவலை பாலம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, இன்று (26) முதல் எதிர்வரும் மார்ச் 02 ஆம் திகதி வரை, இரவு 10.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை, கடுவலை - பியகம வீதியிலுள்ள பாலம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சாரதிகள் மாற்று வழியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tue, 02/26/2019 - 10:11
from tkn