பூச்சாடிகளுக்குள் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் கைது

நாத்தான்டிய பனன்கொட பிரதேசத்தில் பூச்சாடிகளை வளர்க்கும் போர்வையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாக ௯றப்படும் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (25) மாலை மாரவில போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாத்தான்டிய மற்றும் மாரவில பகுதிகளைச் சேர்ந்த 31, 35வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று, இவ்வாறு பூச்சாடிகளை வளர்க்கும் போர்வையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1100கஞ்சா செடிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர் - ரஸீன் ரஸ்மின்)

Tue, 02/26/2019 - 12:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை