வல்லப்பட்டையை டுபாய்க்கு கொண்டுசெல்ல முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் 21 வயதுடைய ஒருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன், இச்சந்தேக நபரிடமிருந்து 1.2 மில்லியன் பெறுமதியான 27 கிலோகிராம் வல்லப்பட்டையையும் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
நீர்கொழும்பைச் சேர்ந்த இச்சந்தேக நபர், டுபாயில் வசித்துவரும் நிலையில், தனது பயணப்பொதியில் மறைத்துவைத்து வல்லப்பட்டையை கொண்டுசெல்ல முற்பட்டபோது நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Sat, 02/02/2019 - 08:32
from tkn