மின்சாரத்தை மோசடியாக பாவித்தது தொடர்பில் கடந்த வருடம் 2,500பேர் கைதுசெய்யப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்மானிகளில் அளவீடுகளை மாற்றியது, திருட்டுத்தனமாக இணைப்பு பெற்று மின்சாரம் பெற்றது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவர்கள் கைதாகியுள்ளனர்.
குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக தண்டப்பணம் பெறப்பட்டதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு 130 மில்லியன் ரூபா பெறப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
Tue, 02/12/2019 - 11:28
from tkn