59 வயதான சந்தேகநபர் கைது
சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஸ்யால, வீரகுல, வீரசூரிய கந்த பகுதியில் நடத்திச் சென்ற போலி வைத்தியர் மத்திய நிலையத்தில் வைத்தியராக அடையாளப்படுத்தி வந்த நபர் ஒருவரிடம், பல்வேறு வகையான போதை மாத்திரைகள் மற்றும் மாத்திரை உறைகள் (Capsules) சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நேற்று (15) நண்பகல் அளவில் வீரகுல பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவ்வாறு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் இன்றைய தினம் (16) அத்தனகல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீரகுல பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
from tkn