அவுஸ்திரேலிய அணியில் மாற்றம்

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறவுள்ள 4ஆவது டெஸ்டில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய அணியில் மார்னஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதும் 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் ஜனவரி 3இல் சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 1–2 என பின்தங்கி உள்ள அவுஸ்திரேலிய அணி, சிட்னி டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் டுபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான இவர், இதுவரை 2 போட்டியில் விளையாடி உள்ளார்.

இந்திய தொடருக்கு பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மிட்சல் மார்ஷ் ஆகியோர் மத்திய வரிசையில் இடம் பிடித்திருந்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆஸி. அணி: டிம் பெய்ன் (தலைவர்), ஆரோன் பின்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் க்வாஜா, மார்னஸ், மிட்சல் மார்ஷ், நெதன் லியோன், ஷோன் மார்ஷ், பட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், மிட்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட்.

Tue, 01/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை