`தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமேல் சிம்புதான்!’ - சீமான் பேச்சு

தமிழ்நாட்டின் ரியல் சூப்பர் ஸ்டார் சிம்புதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி மற்றும் மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக `இன எழுச்சி முழக்கம்’ பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய சீமான், ரஜினி, கமல் போன்றோரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசுகையில், ``ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் இருக்கும்போதே அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். அவர்தான் உண்மையான ஆண்மகன். ரஜினி, கமல் போன்றோர் ஹீரோக்கள் அல்ல; ஜீரோக்கள். உங்கள் திரை ஆளுமையை நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால், எங்களை ஆள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்கிறார்கள். நல்லகண்ணுவைத் தாண்டிய ஒரு தலைவன் இந்தியாவிலேயே உண்டா?’’ என்று பேசினார். சர்கார் பட விவகாரத்தில் விஜய் உறுதியாக நின்றிருக்கலாம் என்று கூறிய சீமான், `என் படத்தில் அவர் நடிக்க மாட்டாரு.. ஆனால், நான் பேசுனத எல்லாம் பேசி நடிப்பார்’ என்றும் கூறினார்.

நடிகர் சிம்பு குறித்து பேசிய சீமான், ``தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமேல் என் தம்பி சிலம்பரசன்தான். அவரை வைத்து 3படங்கள் எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அவர்தான் ரியல் சூப்பர் ஸ்டார். எல்லோர்கிட்டயும் கதை சொல்லிட்டேன். ஆனா, பயந்துட்டாங்க. `நான் நடிக்கிறேன்’ அண்ணா என்று சிம்பு சொன்னார்’’ என்று குறிப்பிட்டார். சிம்பு நடிக்கும் அந்தப் படம் தீபாவளிக்குத் திரைக்கு வரும் என்று குறிப்பிட்ட சீமான், படம் ரொம்பப் பேசும் என்றும் தெரிவித்தார். சிம்பு நேர்மையானவர் என்று கூறிய சீமான், அவர் துணிவானவர் என்றும் பாராட்டினார்.  

Mon, 01/07/2019 - 12:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை