இலங்கையின் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள கேணல் டேவிட் அஷ்மான் (Colonel David Ashman) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவை சந்தித்தார்.
இன்று (18) கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி விடைபெற்றுச் செல்லும் குறூப் கெப்டன் ப்ரேசர் நிக்கல்சனும் (Group Captain Frazer Nicholson) பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பின்போது, இரு தரப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் தொடர்பில் அவர்கள் கலந்துரையாடியதோடு, விடைபெற்றுச் செல்லும் பாதுகாப்பு ஆலோசகர் ப்ரேசர் நிகல்சன் தனது கடமைக் காலத்தில், இலங்கை கடற்படை வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் தனது நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வின்போது, இது தரப்பினருக்கும் இடையில் நியாபகச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
from tkn