அரோ விளையாட்டுக் கழகத்தின் கூடைப்பந்தாட்ட போட்டி

கொழும்பு 4 முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சிலா் இணைந்து ”அரோ விளையாட்டுக் கழகமொன்றை ஆரம்பித்துள்ளனர். பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இக் கழகத்தின் தலைவியாக கொழும்பு மாநகர சபையின் ஜே.வி.பி கட்சியின் பிரநிதியாக உள்ள நப்லா ஹம்சா செயற்படுகிறார்.செயலாளராக சப்னா செயற்படுகின்றார்.

இக் கழகத்தில் உள்ள அங்கத்தவர்கள் 6 அணிகளாக இணைந்து கடந்த ஞயிற்றுக்கிழமை(6) கூடைப் பந்தாட்டப் போட்டி ஒன்றினை வெள்ளவத்தையில் உள்ள குரே விளையாட்டு மைதானத்தில் நடத்தினர். இவ் விழாவின் ஆரம்ப விழாவுக்கு வைத்தியர் ரணில் ஜயசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கூடைப்பந்தாட்டப் போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

அரோ விளையாட்டுக் கழகத்தின் ஏ கழகமும் பீ கழகமும் இறுதி போட்டிக்கு தெரிவாகினர். வெற்றிக் கிண்ணத்தினை ஏ அணியின் தலைவி சஹாராவுக்கு கழகத்தின் ஆலோசகரும் விளையாட்டு ஆசிரியையுமான ஏரங்கனி ஜயலத்தும் மற்றும் கௌரவ அதிதி பி.எஸ்.ஜே. கருணாரத்தினவும் வழங்கி வைத்தனர்.

தெஹிவளை - கல்கிஸை விசேட நிருபர் 

 

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை