கல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல் விழா நேற்று (17) பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. காலையில் கல்முனைத் தரவைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து தைப்பொங்கல் பவனி அம்பாறை அரசாங்க அதிபர் ஜே.திசாநாயக்காவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கூடவே மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன், திறைசேரியின் முகாமைத்துவ சேவை பிரதிப் பணிப்பாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர். (படங்கள்: காரைதீவு குறூப், பெரிய நீலாவணை விசேட நிருபர்கள்)

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை