2019 உலகக் கிண்ணத்தை வெல்லும் திறமை பாகிஸ்தானுக்கு உள்ளது – சுஐப் மலிக்

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 2019 உலகக் கிண்ணத்தை வெல்லும் திறமை பாகிஸ்தான் அணிக்கு உள்ளது என்று சுஐப் மலிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சுஐப் மலிக் இடம்பிடித்து விளையாடி வருகிறார். தென்ஆபிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 2019 உலக்கிண்ணத்தை வெல்லும் திறமை பாகிஸ்தானிடம் உள்ளது என்று சுஐப் மலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுஐப் மலிக் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையை வென்று கையில் ஏந்தும் திறமை எங்களிடம் உள்ளது. ஆனால், திறமை மட்டும் இருந்தால் எதையும் வெல்ல முடியாது. சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும்.

உலகக் கிண்ணத்தை வெல்லும் அளவிற்கான தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்கள் கொண்டுள்ளோம். நினைவுகூரத்தக்க 2019 உலகக்கிண்ணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

Wed, 01/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை