ஜல்லிக்கட்டு அமைப்பின் கிரிக்கெட் சமர்!

2019ம் ஆண்டினை வரவேற்கும் முகமாக காரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டி மிக சிறப்பாக (16) காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியானது ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் தலைவர் ஏ.விஷிகரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும் விசேட அதிதிகளாக காரைதீவு பிரதேசசபை உறுப்பினர்கள் மு.காண்டீபன், திருமதி.எஸ்.ஜெயராணி ச.நேசராஜா ஆ.பூபாலரெட்ணம் த.மோகனதாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ் சுற்றுப்போட்டியில் பலம் வாய்ந்த 8 அணிகள் கலந்து கொண்டன.இவ் சுற்றுப்போட்டியை குதூகலப்படுத்துவதற்காக ஆளவந்தான்.சிங்கம்.மாரி.சர்கார்.புலி. மங்காத்தா.சாமி.பில்லா எனும் பெயர்களில் அணிகள் களமிறங்கியிருந்ததன.

விறு விறுப்பாக நடைபெற்ற இச் சுற்றுப்போட்டியில் இறுதி போட்டியிற்கு பவிதரன் தலைமையிலான ஆளவந்தான் அணியினரும் கபிலன் தலைமையிலான சிங்கம் அணியினரும் சிந்துஜன் தலைமையிலான புலி அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர். பலத்த போட்டிக்கு மத்தியில் ஆளவந்தான் அணியினர் வெற்றி வாகை சூடியது.

இப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக சுலக்சன் தொடர் ஆட்ட நாயகனாக பிரதீசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.முதல் மூன்று அணிகளை பெற்ற அணிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

காரைதீவு குறூப் நிருபர்

Tue, 12/18/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை