சோபர் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய சீருடை

அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் அட்டாளைச்சேனை நிலா மியா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது.

சோபர் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவரும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன் போது சோபர் விளையாட்டுக் கழகத்தின் 2019 ம் ஆண்டுக்கான புதிய கிரிக்கெட் சீருடையினை பிரதம அதிதி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி அறிமுகம் செய்து வைத்தார். இச்சீருடையினை வை.ஏ.றிசான் அன்பளிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

சோபர் விளையாட்டுக் கழகத்தின் 2018 / 2019 நடப்பு வருடங்களுக்கான நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கழக உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை