ஆட்கடத்தல்காரர்களால்1980களில் கடத்தப்பட்ட ஆர்ஜன்டீன பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டு மீண்டும் அவரின் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளார்.
ஆர்ஜன்டீன மற்றும் பொலிவிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தற்போது 45 வயதாகும் அந்தப் பெண் எங்கே இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தெற்கு பொலிவியாவின் பெர்மெஜோ பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த வீடு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு அவர் மற்றும் அவரது ஒன்பது வயது மகனும் காப்பற்றப்பட்டுள்ளனர்.
அந்தப் பெண்ணை மார் டெல் பிளாடாவில் இருக்கும் அவரது குடும்பத்தினருடன் இணைக்க முடிந்ததாக ஆர்ஜன்டீன பொலிஸார் கடந்த செவ்வாக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இம்மாத ஆரம்பித்திலேயே அந்த பெண் மற்றும் அவரது மகன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும்32 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தகடத்தலுடன் தொடர்புபட்டவர்கள் விபரம் பொலிஸ் அறிவிப்பில் கூறப்படவில்லை.
from tkn