புகையிரதம் - டிப்பர் வண்டியும் மோதியதில் டிப்பர் சாரதி படுகாயமடைந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புலதிசி கடுகதி புகையிரதத்துடன் டிப்பர் வாகனம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று சனிக்கிழமை (05) வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தமடு பகுதியில் வைத்து, கடவத்தமடு பகுதியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு பிரதான வீதிக்கு சென்ற டிப்பர் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் டிப்பர் கடும் சேதமடைந்துள்ளதுடன், புகையிரத வண்டியும் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்பு புகையிரத சேவைகள் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த டிப்பர் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
from tkn