யாழில் நிலக்சனின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நிகழ்வு

 

சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலரஞ்சலி செலுத்தி, சுடரேற்றப்பட்டது.

சகாதேவன் நிலக்சன், யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ்.மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமாவார்.இவர் கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளையில், திடீரென அதிகாலை 5 மணியளவில் அங்கு சென்ற ஆயுததாரிகள், நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mon, 08/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை