Gas க்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை

'லிற்றோ' தலைவர் தெரிவிப்பு

சந்தையில் சமையல் எரிவாயுவுக்கு எத்தகைய தட்டுப்பாடும் கிடையாது என்றும் அது தொடர்பில் மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. போதியளவு சமையல் எரிவாயு தமது நிறுவனத்திடம் கையிருப்பில் உள்ளதாகவும் தேவைப்படின் மேலும் போதியளவு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்து கொள்ள முடியும் என்றும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தேஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். சிலர் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு இருப்பது போன்று காட்ட முற்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சமையல் எரிவாயுவுக்கு எந்த வித தட்டுப்பாடும் கிடையாது. அதேவேளை எந்த ஒரு வர்ணத்திலான எந்த வகை சிலிண்டரையும் வழங்கி லிட்ரோ சமையல் எரிவாயுவை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும்.

சமையல் எரிவாயுவை தட்டுப்பாடின்றி கொள்வனவு செய்து கொள்ளக்கூடிய வலையமைப்பு எமது நிறுவனத்திற்கு உள்ளது. அதற்கிணங்க தற்போது தேவையான சமையல் எரிவாயு எமது நிறுவனத்திடம் கையிருப்பில் உள்ளது. எதிர்காலத்தில் தேவைப்படும் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சந்தையில் அதை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் எமது நிறுவனத்திற்கு போதியளவு உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 07/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை