பொது போக்குவரத்து சேவைகள் நாளை முதல் நடைபெற மாட்டாது

- இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

நாளை முதல் நாடு முழுவதும் மீண்டும் பயணத்தடை நடைமுறைக்கு வரவுள்ளதால் பொது போக்குவரத்து சேவைகள் நடைபெற மாட்டாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ரயில் சேவைகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து பஸ் சேவைகள் நடைபெற மாட்டாதென தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், அத்தியாவசிய சேவைகளுக்காக வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் அதற்கென இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸ் தடுப்புக்கான இறுதித் தீர்வு பயணத் தடை அல்ல என்றும் தடுப்பூசியை முறையாக பெற்றுக்கொண்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதே கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முக்கிய செயற்பாடாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 05/20/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை