மே 31 பயணக் கட்டுப்பாட்டு தளர்வு; இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை

நிலைமைகளை அவதானித்தே முடிவு என்கிறார் சவேந்திர சில்வா

பயணக் கட்டுப்பாடுகளை மே 31ஆம் திகதி தளர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நாட்டின் நிலைமைகளை அவதானித்தே இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

31ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தல் குறித்து இன்று தீர்மானிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போது மக்களின் செயற்பாடுகள் குறித்து இராணுவத் தளபதி கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை