நாட்டின் சில இடங்களில் பிற்பகலிலோ இரவிலோ மழை

நாட்டின் சில இடங்களில் பிற்பகலிலோ இரவிலோ மழை-Evening Rain-Hot Weather at Day Time

- ஒரு சில இடங்களில் சூரியன் உச்சம்
- ஏப்ரல் 05 - 14 வரை இலங்கைக்கு நேரே சூரியன்

நாட்டின்பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா, சப்ரகமுவ, மத்திய, தென், மேல், வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் சில இடங்களில் எதிர்வரும் நாட்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
இன்று (10ஆம் திகதி) நுரைச்சோலை, கறுவலகஸ்வெவ, பளுகஸ்வெவ, உஸ்வெவ, சிங்கபுர, கெலேகரம்பாவ மற்றும் குமாதிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Sat, 04/10/2021 - 12:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை